ஜார்க்கண்ட்: 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் சீட் கொடுத்த காங்கிரஸ்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நள்ளிரவில் வெளியிட்டது. 21 வேட்பாளர்களைக் கொண்ட இந்த முதல் கட்ட பட்டியலில் 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது காங்கிரஸ். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 29 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சியான பாஜக கூட்டணியில் ஏஜேஎஸ்யூ, ஜேடியூ, எல்ஜேபி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 31 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 27 முதல் 29 இடங்கள்தான் தர முடியும் என கறாராக சொல்லிவிட்டது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. இதேபோல ஆர்ஜேடியும் கணிசமான இடங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் நள்ளிரவில் அறிவித்தது. இந்த 21 பேரில் 4 அமைச்சர்கள் உட்பட 15 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் அதிருப்தி அலையால் தோல்வியையே அதிகம் தழுவக் கூடிய வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியோ சிட்டிங் எம்.எல்.ஏ.க்களை முழுமையாக நம்பி மீண்டும் தேர்தல் களத்துக்கு அனுப்பி இருக்கிறது. அதேநேரத்தில் பாஜகவோ பெரும்பாலான மாநில தேர்தல்களில் சிட்டிங் எம்.எல்.ஏக்க்களுக்கு சீட் தர மறுத்து புது முகங்களை களமிறக்கி வெற்றியை அறுவடை செய்வதை வியூகமாக வைத்திருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications