ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - ஜே.எம்.எம்.-காங் அணி 47 இடங்களில் வென்றது- பாஜக- 25 தொகுதிகள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம்.-காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணி 47 தொகுதிகளில் வென்று புதிய அரசை அமைக்க உள்ளது. இக்கூட்டணியின் ஹேமசந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஜார்க்கண்ட்டில் இதுவரை இல்லாத வகையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தனிப்பெரும் கட்சியாக 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஜே.எம்.எம். தலைமயிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் ஆர்ஜேடி ஒரு தொகுதியிலும் வென்றுள்ளது.

47 இடங்களில் வெற்றி
இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 41. தற்போது ஜே.எம்.எம். கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதிய அரசை இக்கூட்டணி எவ்வித தடையுமின்றி அமைக்க உள்ளது.

புதிய முதல்வராக ஹேமந்த் சோரன்
ஜே.எம்.எம்.-ன் ஹேமந்த் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ளார். கடந்த தேர்தலில் 37 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 25 தொகுதிகளில்தான் வென்றுள்ளது.

கட்சிகள் வென்ற இடங்கள்
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பி) 3 இடங்களிலும் ஏஜேஎஸ்யூ 2 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 1 தொகுதியிலும் வென்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக பாஜகவின் ரகுபர்தாஸ் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.

15,000 வாக்குகளில் தோல்வி
புதிய அரசு பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக ரகுபர்தாஸை நீடிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தேர்தலில் ரகுபர்தாஸ், சுயேட்சை வேட்பாளர் சரயு ராயிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

2-ல் வென்ற ஹேமந்த் சோரன்
இத்தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஹேமந்த் சோரன், அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து புதிய அரசு அமைக்கப்படும். சட்டசபை தேர்தலில் தெளிவான தீர்ப்பை தந்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி என்றார். டும்கா, பர்ஹ்யெத் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications