ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா.. மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் வெளியே வந்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.
காங்கிரஸ் தலைமையிலனா இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் ராஞ்சியில் 8.5 ஏக்கா் நிலத்தைப் பெற போலி ஆவணங்கள் தயாரித்து தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என புகார் எழுந்தது.

அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட உள்ளதை அறிந்து உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னரே அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. கடந்த ஆறு மாதங்களாக ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு, தான் வகித்த முதல்வர் பதவியை கட்சியின் மூத்த தலைவா் சாம்பாய் சோரன் அளித்துவிட்டு சென்றார்.இதையடுத்து ஜாா்க்கண்ட் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார். சில மாதங்களுக்குப் பிறகு ஜார்க்கண்ட் நீதிமன்றம் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் பிணையில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார் இதற்காக முதல்வர் சாம்பாய் சோரன் வீட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்களின் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன். இதனிடையே சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் இன்று மாலை அளித்தார்.
அப்போது சாம்பாய் சோரனுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது ஹேமந்த் சோரன் தன்னை ஆட்சியமைக்க அழைக்கும் படி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து உரிமை கோரினார்.. அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் விரைவில் ஹேமந்த் சோரனை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றால், கடந்த 2000 நவம்பரில் பீகாரில் இருந்து பிரிக்கப்பட்ட ஜார்க்கண்டின் 13வது முதல்வராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications