முஸ்லீம் இளைஞர் அன்ஸாரி மரணம்.. குற்றவாளிகள் மீது கொலை வழக்கை திரும்ப பெற்றது ஜார்கண்ட் போலீஸ்
Recommended Video
ராஞ்சி: ஜார்கண்ட் முஸ்லீம் இளைஞர் தப்பேஜ் அன்ஸாரி அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பதிவு செய்திருந்த கொலை வழக்கை ஜார்கண்ட் போலீசார் திரும்ப பெற்றுள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் உள்ள கதம்டீஹா கிராமத்தை சேர்ந்தவர் தான் தப்பேஜ் அன்ஸாரி (22 வயது). இவர் ஜம்ஷேபுரில் இருந்து கடந்த ஜுன் மாதம் 17ம் தேதி கத்கி டிஹ என்ற கிராமத்தின் வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை திருட வந்ததாக நினைத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த கோர சம்பவத்தில் தப்பேஜ் அன்ஸாரி. உயிரிழந்தார். இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து அன்ஸாரியின் உடலை ஒப்படைக்கும் சமயத்தில் தப்பேஜ் அன்ஸாரி. அடித்து துன்புறுத்தப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. இதற்கிடையெ அன்ஸாரியை ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி அந்த கும்பலைச் சேர்ந்தோர் அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததால் அன்ஸாரியை அடித்து துன்புறுத்திய 13 பேர் மீது ஐபிசி 302வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் ஜார்க்கண்ட் போலீசார்.
ஆனால் இரண்டாவது மருத்துவ பரிசோதனை அறிக்கை அண்மையில் வெளியானது. அந்த அறிக்கையில் தாக்குதல் மற்றும் மாரடைப்பு காரணமாகவே அன்ஸாரி இறந்து போனதாக கூறப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்டின் சராய்கேலா கர்ஸாவன் போலீசார் குற்றம்சாட்டப்பட்ட 13 பேர் மீது பதிந்து இருந்த கொலை வழக்கு பிரிவனை ரத்து செய்தனர். மேலும் இது தொடர்பாக புதிய துணை குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications