ரூ.25,000 வரதட்சணை பாக்கிக்காக கணவருக்கு கிட்னி தந்த மனைவி தற்கொலை... மாமியார் கைது
ராஞ்சி: ஜார்கண்டில் வரதசட்சணை பாக்கிக்குப் பதிலாக கணவனுக்கு கிட்னி தானம் செய்தபோதும், கொடுமை தொடர்ந்ததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்த சுதாமா கிரி என்பவரது மனைவி பூனம் தேவி( 28). கடந்த 2006ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பூனம் தேவியின் தந்தை வரதட்சணையாக ரூ 1.31 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த வரதட்சணை தொகை போதவில்லை என பூனம் தேவியை கணவர் குடும்பத்தார் கொடுமை செய்து வந்துள்ளனர். இதற்கிடையே கிரிக்கு கிட்னி செயலிழந்தது. பூனம் தேவியின் கிட்னி கிரிக்கு பொருந்தும் என்பதைத் தெரிந்து கொண்ட அவரது குடும்பத்தார், மீதமுள்ள வரதட்சணைப் பணம் ரூ25 ஆயிரத்திற்குப் பதிலாக அவரது கிட்னியைத் தானம் தரும்படி எழுதி வாங்கிக் கொண்டனர்.
கிட்னியை தானமாகக் கொடுத்த பூனம் தேவியும், இனியும் தன் தந்தையை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்த வேண்டாம் என சத்தியம் வாங்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இருந்தாலும் கிரியின் குடுமபத்தினர் தொடரந்து தேவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர்.
இதனால் மனமுடைந்த தேவி கடந்த 16 ந்தேதி தனக்குத் தானே தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உடல் கருகிய நிலையில் ராஞ்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தேவி, சிகிச்சைப் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து தேவியின் தந்தை தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி கொலை செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேவியின் மாமியாரை கைது செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications