டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா வந்துள்ள சீனா அதிபர் ஜி ஜின்பிங்குடன் டெல்லியில் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்தார் ஜின்பிங். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பின்னர் ஹோட்டல் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை ஜின்பிங் சந்தித்துப் பேசினார். அப்போது குஜராத் மாநிலத்துக்கும் சீனாவுக்கும் இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

பின்னர் இருவரும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் சபர்மதி ஆற்றங்கரையோரப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியில் இன்று காலை ஜனாதிபதி மாளிகையின் ஜின்பிங்குக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டது. ஜின்பிங்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார்.
அங்கு ஜின்பிங்குக்கு தனது அமைச்சரவை சகாக்களை மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஜின்பிங் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் சீனா அதிபர் ஜின்பிங் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.












Click it and Unblock the Notifications