370வது பிரிவு ரத்து என்னும் மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரும்: மெகபூபா முப்தி
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரு என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யபப்ட்டது. இதனையடுத்து மெகபூபா முப்தி உள்ளிட்ட அந்த மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் சிறைப்படுத்தப்பட்டனர்.

பொது பாதுகாப்பு சட்டம்
எந்த ஒரு குற்றவழக்கும் இல்லாமல் குற்றச்சாட்டும் இல்லாமல் பல மாதங்களாக இவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். பல தலைவர்கள் மீது பொதுபாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மெகபூபா முப்தி விடுதலை
ஆனால் மற்றொரு முன்னாள் முதல்வராக மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருந்தார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில் 14 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமையன்று மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.
|
370வது ரத்து- கொடூரமானது
இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான மெகபூபா முப்தி, ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது: ஓராண்டு காலத்துக்கும் மேலான சிறைவாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன். மத்திய அரசின் 370வது பிரிவு ரத்து என்கிற கொடூரமான முடிவு குறித்துதான் நான் சிந்தித்து கொண்டே இருந்தேன்.

நமது போராட்டம் தொடரும்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சாசனப் பிரிவு மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கான நமது போராட்டம் தொடரும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீரிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications