370வது பிரிவு ரத்து என்னும் மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரும்: மெகபூபா முப்தி
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் கொடூர முடிவுக்கு எதிரான போராட்டம் தொடரு என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசால் ரத்து செய்யபப்ட்டது. இதனையடுத்து மெகபூபா முப்தி உள்ளிட்ட அந்த மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் சிறைப்படுத்தப்பட்டனர்.

பொது பாதுகாப்பு சட்டம்
எந்த ஒரு குற்றவழக்கும் இல்லாமல் குற்றச்சாட்டும் இல்லாமல் பல மாதங்களாக இவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். பல தலைவர்கள் மீது பொதுபாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மெகபூபா முப்தி விடுதலை
ஆனால் மற்றொரு முன்னாள் முதல்வராக மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருந்தார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில் 14 மாதங்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் செவ்வாய்க்கிழமையன்று மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வருகின்றனர்.
|
370வது ரத்து- கொடூரமானது
இதனிடையே சிறையில் இருந்து விடுதலையான மெகபூபா முப்தி, ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மெகபூபா முப்தி கூறியுள்ளதாவது: ஓராண்டு காலத்துக்கும் மேலான சிறைவாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கிறேன். மத்திய அரசின் 370வது பிரிவு ரத்து என்கிற கொடூரமான முடிவு குறித்துதான் நான் சிந்தித்து கொண்டே இருந்தேன்.

நமது போராட்டம் தொடரும்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சாசனப் பிரிவு மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்கான நமது போராட்டம் தொடரும். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீரிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications