மானம் போகுது: பாலியல் புகார்களை வெளியே சொல்லாதீர்கள்: மாணவர்களுக்கு ஜே.என்.யு. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து அதிக அளவில் பாலியல் புகார்கள் அளிக்கப்படுவதால் அது குறித்து வெளியே தெரிவிக்கக் கூடாது என்று மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து ஏராளமான பாலியல் புகார்கள் வருகின்றது. பிரபல பல்கலைக்கழகத்தில் இருந்து அதிக அளவில் பாலியல் புகார்கள் வருவதால் பலரும் அதை கண்டபடி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகம் மாணவ, மாணவியருக்காக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

JNU asks students, faculty not to publicise sexual harassment cases

பாலியல் புகார்கள் குறித்து யாரும் வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம். பாலியல் புகார்கள் குறித்து வெளியே தெரிவிப்பதால் நமக்கு தான் மோசமான சூழல் உருவாகிறது. அரிசயல் ஆதாயத்திற்காக பாலியல் புகார்கள் குறித்த விபரங்களை யாராவது வெளியிடுவது சரி அல்ல.

பாலியல் புகார்கள் அளிக்க விரும்புவோர் அதை பல்கலைக்கழக குழுவிடம் தான் அளிக்க வேண்டும். மாறாக வெளியே தெரிவித்தால் அது பாதிக்கப்பட்டவர்களின் துயரை அதிகரிக்கத் தான் செய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-2014ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 25 பாலியல் புகார்கள் எழுந்துள்ளன என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த வாரம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள 16 கல்வி நிறுவனங்களில் பதிவான 101 பாலியல் புகார்களில் 50 சதீவதம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பதிவானது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+