ராகுல் காந்தியை சாதாரணமா நினைச்சுட்டீங்களா.. பிரதமர் மோடிக்கு ஜோதிமணி பதிலடி
சென்னை: ராகுல்காந்தியை யாரோ ஒருத்தருனு நினைச்சீங்களா, அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்று பிரதமர் மோடிக்கு ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக பிரசாரத்தில் பாஜகவும் , காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தியிடம் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் பதிலளிக்கையில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் நான்தான் பிரதமர் என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி நேற்றைய தினம் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசுகையில் ராகுலை காட்டிலும் அவரது கட்சியில் அனுபவசாலிகள் உள்ளனர். அப்படியிருக்கும் போது தன்னை தானே பிரதமர் என்று ஒருவர் கூறுவாரேயானால் அவர் அகந்தையில் பேசுகிறார் என்பதே அர்த்தம் என்றார்.
Seems Rahul Gandhi's admission that he isready for d job of the nation's Prime Minister hit the raw nerve of Modi ji. He is not just someone Modi ji. He is the President of the Congress Party. If voted to power he will make this country great again with love, compassion&vision
— Jothimani (@jothims) May 9, 2018
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் பிரதமராவேன் என்று ராகுல் காந்தி கூறியதை பார்க்கும்போது தேசத்தின் பிரதமராக அவர் தயாராகிவுள்ளார் என்றே தெரிகிறது.
இதன் மூலம் மோடியின் மூல நாடி மீதே தாக்குதல் நடத்தியுள்ளார். மோடி அவர்களே ராகுல் ஒன்றும் யாரோ ஒருவரல்ல, அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் இந்த நாட்டை அன்பு, கருணை, தொலை நோக்கு பார்வை கொண்ட நாடாக மாற்றுவார் என்றார் ஜோதிமணி.












Click it and Unblock the Notifications