10 வயது மாணவியின் ஐபோன் உட்பட ரூ. 90 ஆயிரத்தை திருடிய வழக்கு... ஆசிரியைக்கு ஜாமீன்
மும்பை: மாணவியின் ரூ 90 ஆயிரம் மதிப்பிலான ஐபோன் மற்றும் கைப்பையை திருடிய ஆசிரியைக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.
மும்பை ஜுகுவில் உள்ள சர்வதேச பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவி ஒருவர் கடந்தவாரம் நீச்சல் பயிற்சிக்கு செல்வதற்காக தன்னுடைய ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் கைப்பையை உடைமாற்றும் அறையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
பயிற்சி முடிந்து திரும்பி வந்த மாணவி தனது உடமைகள் திருடு போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக மாணவியின் தாயார் சார்பில் ஜுகு போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை மயூர் பட்வாலே (வயது 38), மாணவியின் செல்போனை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து மாணவியின் கைப்பை மற்றும் செல்போனை கைப்பற்றினர்.
விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியைக்கு தற்போது ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications