இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக... தலைமறைவான நிலையில் நீதிபதி கர்ணன் இன்றுடன் ஓய்வு
உச்சநீதிமன்றம் விதித்த சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவான கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
டெல்லி: உச்சநீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக உள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்திய நீதித்துறை வரலாற்றில் நீதிபதி ஒருவர் தலைமறைவானதும் அப்படி தலைமறைவான நிலையிலேயே ஓய்வு பெறுவதும் இதுவே முதல் முறை.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் கர்ணன். அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறி பரபரப்பை கிளப்பினார் கர்ணன்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது. பின்னர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு கர்ணன் மாற்றப்பட்டார்.

கர்ணனுக்கு மனநல பரிசோதனை
இந்த அவதூறு விசாரணையின் போது நீதிபதி கர்ணனனுக்கு மனநல பரிசோதனைக்கு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணனோ உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டு புதிய சர்ச்சையை கிளப்பினார்.

6 மாதம் சிறை
இதனால் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார்.

சிறை தண்டனை உறுதி
ஆனால் இந்த மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து கர்ணனின் சிறை தண்டனையை ரத்து செய்தது. இந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

பணி ஓய்வு
இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே ஒரு நீதிபதியே தலைமறைவானதும் இதுவே முதல் முறை... அப்படி தலைமறைவாகிவிட்ட நிலையிலேயே பணி ஓய்வு பெறுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications