புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வந்த முதல் கோரிக்கை மனு யாருடையது தெரியுமா?
சிறையில் இருக்கும் நீதிபதி கர்ணன் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். அப்போது அவர் மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. நாட்டிலேயே முதன்முறையாக நீதிபதி ஒருவருக்கே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகம் வந்த நீதிபதி கர்ணன், அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸ் சென்னை வரும் முன்னரே தலைமறைவானார். இதனிடையே கடந்த மாதம் 20ம் தேதி கோவை அருகே முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிடம் 4 முறை மனு செய்தார் கர்ணன். ஆனால் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு பரோலுக்கும் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனால் நீதிபதி கர்ணன் மீதான தண்டனை நீக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் அலுவலகத்தில் கர்ணன் தரப்பு வழக்கறிஞர் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ணணின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications