புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வந்த முதல் கோரிக்கை மனு யாருடையது தெரியுமா?
சிறையில் இருக்கும் நீதிபதி கர்ணன் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி முன்னாள் நீதிபதி கர்ணன் புதிய குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன் கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். அப்போது அவர் மீது உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் 6 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. நாட்டிலேயே முதன்முறையாக நீதிபதி ஒருவருக்கே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகம் வந்த நீதிபதி கர்ணன், அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீஸ் சென்னை வரும் முன்னரே தலைமறைவானார். இதனிடையே கடந்த மாதம் 20ம் தேதி கோவை அருகே முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிடம் 4 முறை மனு செய்தார் கர்ணன். ஆனால் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு பரோலுக்கும் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனால் நீதிபதி கர்ணன் மீதான தண்டனை நீக்கப்படவில்லை. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் அலுவலகத்தில் கர்ணன் தரப்பு வழக்கறிஞர் தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ணணின் வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா, குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications