குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்கிறார் நீதிபதி ஸ்ரீவஸ்தவா
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவஸ்தவா விசாரிக்க இருக்கிறார்.
குஜராத்தில் மோடியின் வலதுகரமாக விளங்கிய அமித்ஷா உத்தரவின் பேரில் இளம்பெண் ஒருவர் வேவுபார்க்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
மேலும் இதற்கான விசாரணை நீதிபதியை மே 16-க்கு முன்பு நியமிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியான ஸ்ரீவஸ்தவாவைதான் விசாரணை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.
விசாரணைக்கு சிட்டிங் நீதிபதியா? சதாசிவம் எதிர்ப்பு
இதனிடையே விசாரணை கமிட்டிகளுக்கு பணியில் இருக்கும் நீதிபதிகளை நியமிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படி பணியில் உள்ள நீதிபதிகளை நியமித்தால் வழக்குகள் தேக்கமடையும். அதனால் ஓய்வு பெற்ற நீதிபதிகளை விசாரணை கமிட்டிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சதாசிவம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications