த்ரிலுக்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி
கான்பூர்: உத்தர பிரதேசத்தில் 19 வயது மாணவி த்ரிலுக்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்தவர் அனுஷ்கா சிங்(15). கான்பூரில் உள்ள ஹர்மிலாப் மிஷன் பள்ளியில் படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரியான அவருக்கு த்ரில் என்றால் மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில் அவர் த்ரிலுக்காக தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அனுஷ்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பியபோது அனுஷ்கா தூக்கில் பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலை செய்யும் முன்பு அனுஷ்கா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் த்ரிலுக்காக தற்கொலை செய்கிறேன். நான் மகிழ்ச்சியுடன் தான் இந்த காரியத்தை செய்கிறேன். தற்கொலை செய்வது புதிதாகவும், த்ரில்லாகவும் உள்ளது. நான் என் பெற்றோர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.