குடி குடியைக் கெடுக்கும்.. ஐபிஎல் சூதாட்டத்தில் மனைவியை இழந்த குடிகார கணவர்!
கான்பூர்: குடிப்பழக்கம் உடைய நபர் ஒருவர் ஐபிஎல் சூதாட்டத்தில் தனது மனைவியை பெட் வைத்து இழந்த கொடுமை உ.பி. மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது. கணவரின் கேடு கெட்ட செயலால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார், அந்தப் பெண்ணை சூதாட்டத்தில் வென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
மகாபாராதத்தில்தான் மனைவி திரவுபதியை பெட் கட்டி இழந்து நின்றான் தர்மர் என்று படித்திருக்கிறோம். ஆனால் நிஜத்திலும் அதுபோல ஆங்காங்கு நடக்கத்தான் செய்கிறது. இதோ இப்போது கான்பூரில் ஒரு குடிகார கணவர், தனது மனைவியை சூதில் தோற்று அவரை பெரும் துயரத்துக்குள்ளாக்கியுள்ளார்.

கான்பூரின் கோவிந்த் நகரைச் சேர்ந்த அந்த நபர் ஒரு குடிகாரர். நல்ல சொத்து சுகத்துடன் வாழ்ந்து வந்தவர். ஆனால் குடிப்பழக்கத்தாலும் சூதாட்டத்தில் ஈடுபட்டும் தனது சொத்துக்களை அழித்து விட்டார். இவர் குடித்து அழித்ததை விட குடித்து விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு அதில் இழந்த சொத்துக்கள்தான் அதிகம்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் தொடர்பான சூதாட்டத்திலும் அவர் ஈடுபட்டிருந்தார். அதில் ஒரு கட்டத்தில் சூதில் வைக்க பணமோ, பொருளோ இல்லாததால், தனது மனைவியையே பெட் வைத்துள்ளார். அதில் அவர் தோற்றார். இதனால் சூதில் வென்றவர்கள், இனி உன் மனைவி எங்களுக்குச் சொந்தம் என்று கூறியுள்ளனர். அத்தோடு நிற்காமல் அந்தப் பெண்ணுக்குப் போன் செய்து உன்னை உனது கணவர் சூதில் தோற்று விட்டார். இனி எங்களுக்குத்தான் நீ சொந்தம் என்றும் பேசவும் ஆரம்பித்துள்ளன். பல்வேறு "அழைப்புகளையும்" அவர்கள் விடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் தற்போது அந்தக் கும்பலைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவிந்த்நகர் காவல்துறை அதிகாரி அஜய் பிரகாஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், தனது கணவர் பெரிய குடிகாரர் என்றும் தினசரி குடித்து விட்டு வந்து அடிப்பார் என்றும், தநது பெற்றோர் வீட்டிலிருந்து ரூ. 7 லட்சம் வாங்கி வருமாறு கொடுமைப்படுத்தி வந்தார் என்றும் அப்பெண் கூறியுள்ளார் என்றார்.
இந்தத் தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆனது முதலே மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் அந்த நபர். இப்பெண் ஒரு அழகுப் பொருள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications