For Quick Alerts
For Daily Alerts
Just In
ஊழல் புகார்.. கேஜ்ரிவாலுக்கு கபில்சிபல் சவால்
டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ஊழலில் ஈடுபடுவோர் என 30 பேர் பட்டியலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டார். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், வீரப்ப மொய்லி, கபில் சிபல் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த கபிசிபல், தம் மீது அரவிந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்புவதாக தெரிவித்தார். மேலும் தமக்கு எதிராக ஒரே ஒரு புகாரை அவர் நிரூபித்தாலும் கூட உடனே பதவி விலகத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதை நிரூபிக்கத் தவறினால் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் புகாரை நிரூபிக்க கேஜ்ரிவாலுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன் என்றும் கபில்சிபல் கெடு விதித்துள்ளார்.
Comments
English summary
Slamming Arvind Kejriwal for levelling baseless corruption charges against him, Union law minister Kapil Sibal on Saturday said that the Delhi chief minister should either provide proof or resign from his post.
Story first published: Sunday, February 2, 2014, 11:42 [IST]