Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழல் புகார்.. கேஜ்ரிவாலுக்கு கபில்சிபல் சவால்

Subscribe to Oneindia Tamil

Kapil Sibal to Arvind Kejriwal: Prove graft charges against me or quit
டெல்லி: தம் மீதான ஊழல் புகாரை 48 மணி நேரத்தில் நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும் அப்படி நிரூபிக்கத் தவறினால் முதல்வர் பதவியிலிருந்து கேஜ்ரிவால் விலகத் தயாரா? என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ஊழலில் ஈடுபடுவோர் என 30 பேர் பட்டியலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டார். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், வீரப்ப மொய்லி, கபில் சிபல் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த கபிசிபல், தம் மீது அரவிந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்புவதாக தெரிவித்தார். மேலும் தமக்கு எதிராக ஒரே ஒரு புகாரை அவர் நிரூபித்தாலும் கூட உடனே பதவி விலகத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதை நிரூபிக்கத் தவறினால் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் புகாரை நிரூபிக்க கேஜ்ரிவாலுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன் என்றும் கபில்சிபல் கெடு விதித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+