For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதாரண மக்களின் வேதனையை பிரதமரால் உணர முடியவில்லை: கபில் சிபல்

சாதாரண மக்களின் வேதனையை பிரதமரால் உணரமுடியவில்லை. என்ன தியாகம் செய்துவிட்டார் மோடி என கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: சாதாரண மக்கள் படும் வேதனையை கூட பிரதமரால் உணர முடியவில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கபில் சிபல் டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சாதாரண மக்களின் வேதனையை பிரதமரால் உணரமுடியவில்லை. என்ன தியாகம் செய்துவிட்டார் மோடி. மக்கள் வேதனைப்படும் போது ஜப்பானில் இருந்து ஏளனமாக சிரித்தவர் மோடி.

 Kapil Sibal attack on Narendra Modi over demonitisation

யார் கருப்பு பணம் வைத்துள்ளார்கள் என்பதை தெரிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடியின் நடவடிக்கை மக்களை கேலி செய்வது போல் உள்ளது. சாதாரண மக்களின் வலிகளை புரிந்துகொள்ளுங்கள். இரண்டு மூன்று நாட்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டார். மோடியின் அறிவிப்பால் நாட்டு மக்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Congress spokesman Kapil Sibal has blistering attack on Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X