எங்களுக்கே தண்ணீர் இல்லை... தமிழகத்திற்கு எப்படி கொடுக்க முடியும்? கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூரு : கர்நாடகாவில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடய இயலாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தண்ணீர் தருவதில்லை. ஜுன் 12-ல் தண்ணீர் திறந்து விடாததற்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் வழங்காததே காரணம்.

கர்நாடகா அரசு 94 டி.எம்.சி. பதிலாக 64 டி.எம்.சி. நீர் தான் திறந்துவிட்டுள்ளது. 27.557 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிடவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், மைசூருவில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது...
கர்நாடகாவில், 40 ஆண்டுகளாக இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, அணைகளில், பாதியளவு தண்ணீர் கூட இல்லை. இங்குள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கும், குடிநீருக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் விட முடியும். தண்ணீர் இருந்த போதெல்லாம், தமிழகத்துக்கு விட்டுள்ளோம். கடந்த, ஜூனில் கூட, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை மோசமாக உள்ளது.
இரு மாநிலமும் அமர்ந்து பேசி, எதார்த்த நிலையை புரிந்து கொண்டு, அதன்படி செயல்பட வேண்டும். மழை பெய்த பின்னர், நிலைமை சீரடையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications