ஜெயிச்சா இப்படி ஜெயிக்கனும்... சுயேச்சையாக போட்டியிட்டு இடதுசாரியை விழி பிதுங்க வைத்த காரத் பைசல்..!
கோழிக்கோடு: கோழிக்கோடு மாவட்டம் கொடுவல்லி நகராட்சி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட காதர் என்பவருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் காரத் பைசல் தனது முதல் தேர்தலிலேயே 568 ஓட்டுக்கள் பெற்று நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இப்போது இதன் பின்னணி குறித்து இங்கு பார்ப்போம்.

கொடுவல்லி
கோழிக்கோடு மாவட்டம் கொடுவல்லி நகராட்சியை பொறுத்தவரை தங்க நகை வியாபாரம் அதிகம் நடக்கக் கூடிய பகுதி. வித விதமான வெளிநாட்டு நகைகளை கடைக்கு கடை அங்கு நீங்கள் பார்க்க முடியும். இஸ்லாமியர்கள் நிறைந்து காணப்படக் கூடிய இந்தப் பகுதியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி (UDF) மிகவும் வலிமையாக திகழ்கிறது.

ஆதரவு வாபஸ்
இந்நிலையில் கொடுவல்லி நகராட்சியின் 15-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட காரத் பைசல் என்பவருக்கு முதலில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்தது. அவரயே தங்கள் கூட்டணியின் பிரதிநிதியாகவும் அறிவித்தது. இதனிடையே காரத் பைசல் மீது தங்கக் கடத்தல் தொடர்பான புகார் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து பைசலுக்கு டாடா காட்டி அனுப்பிய எல்.டி.எஃப். அப்துல் ரஷீத் என்பவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தது.

உத்வேகம்
எல்.டி.எஃப்.ஐ நம்பி களமிறங்கிய காரத் பைசல் நட்டாற்றில் விடப்பட்டார். இருப்பினும் அவருக்குள் இருந்த வைராக்கியமும், தன்னை நம்ப வைத்து பாதியில் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்ட இடதுசாரியை வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகமும் அவரை தேர்தல் களத்தில் இன்னும் வீரியமாக செயல்படத் தூண்டியது. போட்டியிடுவது வார்டு எலக்ஷனாக இருந்தாலும் கூட எல்.டி.எஃப். வேட்பாளரை இரட்டை இலக்கத்தில் கூட ஓட்டுக்களை பெற்றுவிடக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு காரியமாற்றினார்.

0 ஓட்டுக்கள்
இன்று அதன் பயனாக கொடுவல்லி நகராட்சியின் 15-வது வார்டு தேர்தல் முடிவில் காரத் பைசல் 568 ஓட்டுக்களும், எல்.டி.எஃப். வேட்பாளர் அப்துல் ரஷீத் 0 ஓட்டுக்களும், யு.டி.எஃப். வேட்பாளர் கே.கே.காதர் 468 ஓட்டுக்களும், பாஜக வேட்பாளர் சதாசிவன் 50 ஓட்டுக்களும் பெற்றிருப்பதாக அறிவிப்பு வெளியானது.












Click it and Unblock the Notifications