குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விருப்பம்... உதவியாளர் தகவல்!
குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விரும்புவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விரும்புவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிம்ன்றம் நேற்று முன்தினம் 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
கர்ணன் ஆந்திராவில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலால் போலீசார் அங்கேயும் தேடுதல் 2வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞரும் உதவியாளருமான ரமேஷ் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

நீதிபதி எங்கே?
அப்போது ஒருவேளை நீதிபதி கர்ணன் நாட்டை விட்டு சென்று இருக்கலாம் அல்லது நாட்டைவிட்டு வெளியே செல்லாமலும் இருக்கலாம் என மழுப்பலாக பதிலளித்து உள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா என்பதை தெளிவாக கூற மறுத்துவிட்டார்.

குடியரசுத் தலைவர் தலையிடனும்
மேலும் நீதிபதி கர்ணன் குடியரசுத் தலைவரிடம் முறையிட விரும்புகிறார், இடைக்கால ஜாமீன் பெற விரும்புகிறார். ஏற்கெனவே அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனு நாடாளுமன்றத்திற்கு இதுவரை அனுப்பப்படவில்லை.

போராட்டத்துக்கு தயாராகிறோம்
அதை குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கர்ணன் எதிர்பார்க்கிறார் என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார். மற்றொரு பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்விவகாரத்தில் அடுத்தக்கட்ட சட்டப்பூர்வமான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என கூறியுள்ளார்.

தலைமறைவாக இருக்கனும்
அதற்கான நேரம் வரும்வரையில் அவர் தலைமறைவாக இருக்கவேண்டும் என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவரது உதவியாளர் ரமேஷின் இந்த கருத்தால், நீதிபதி கர்ணன் வங்கதேசம் அல்லது நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகின்றனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications