குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விருப்பம்... உதவியாளர் தகவல்!
குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விரும்புவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட நீதிபதி கர்ணன் விரும்புவதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிம்ன்றம் நேற்று முன்தினம் 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.
கர்ணன் ஆந்திராவில் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலால் போலீசார் அங்கேயும் தேடுதல் 2வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீதிபதி கர்ணனின் வழக்கறிஞரும் உதவியாளருமான ரமேஷ் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

நீதிபதி எங்கே?
அப்போது ஒருவேளை நீதிபதி கர்ணன் நாட்டை விட்டு சென்று இருக்கலாம் அல்லது நாட்டைவிட்டு வெளியே செல்லாமலும் இருக்கலாம் என மழுப்பலாக பதிலளித்து உள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாரா என்பதை தெளிவாக கூற மறுத்துவிட்டார்.

குடியரசுத் தலைவர் தலையிடனும்
மேலும் நீதிபதி கர்ணன் குடியரசுத் தலைவரிடம் முறையிட விரும்புகிறார், இடைக்கால ஜாமீன் பெற விரும்புகிறார். ஏற்கெனவே அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மனு நாடாளுமன்றத்திற்கு இதுவரை அனுப்பப்படவில்லை.

போராட்டத்துக்கு தயாராகிறோம்
அதை குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கர்ணன் எதிர்பார்க்கிறார் என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார். மற்றொரு பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்விவகாரத்தில் அடுத்தக்கட்ட சட்டப்பூர்வமான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என கூறியுள்ளார்.

தலைமறைவாக இருக்கனும்
அதற்கான நேரம் வரும்வரையில் அவர் தலைமறைவாக இருக்கவேண்டும் என்றும் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவரது உதவியாளர் ரமேஷின் இந்த கருத்தால், நீதிபதி கர்ணன் வங்கதேசம் அல்லது நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தேடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications