6 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் தர முடியும்.. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா புதிய மனு #cauvery
டெல்லி: 6 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் தர முடியும் என்ற நிலையில் உள்ளோம். அதுவும் கூட தற்போது விநாடிக்கு 10,000 கன அடி நீர் மட்டுமே திறக்கக் கூடிய நிலையில் உள்ளோம் என்று கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கர்நாடக மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் சில அமைப்புகள் தொடர் போராட்டங்களில் குதித்துள்ளன. உச்சகட்டமாக அனைவரையும் பீதிக்குள்ளாக்கும் வகையில் ஒரு பந்த்தையும் நடத்தி முடித்தனர். தமிழர்கள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீதான தாக்குதலுக்கும் குறைவில்லை.
இந்த நிலையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்கக் கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தற்போது திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விநாடிக்கு 10,000 ஆக குறைக்க உத்தரவிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் 6 நாட்களுக்காவது தண்ணீர் திறக்க முடியும்.
கர்நாடகத்தில் மிகவும் மோசமான நிலை உள்ளது. போதிய தண்ணீர் இல்லாததாலும், விவசாயிகள் போராட்டம் காரணமாகவும் தினசரி ரூ. 500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே செப்டம்பர் 5ம் தேதி வெளியிட்ட தீர்ப்பில் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கர்நாடகத்தில் காவிரி பாசனப் பகுதியில் உள்ள விவசாயப் பணிகளுக்கு 40 டிஎம்சி தண்ணீர் தேவை. ஆனால் தற்போது நான்கு முக்கிய அணைகளிலும் மொத்தமே 39 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் நேற்று கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வழங்கியுள்ளார். இன்று இந்த வழக்குப் பதிவாகிறது. விசாரணை எப்போது என்பது பின்னர் தெரிய வரும்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications