For Daily Alerts
Just In
மாநகராட்சி ஆணையரை கன்னத்தில் அறைந்தார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா?
பெல்லாரி: கர்நாடகாவில் மாநகராட்சி ஆணையர் ஒருவரை முதல்வர் சித்தராமையா கன்னத்தில் அறைந்ததாகக் கூறி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா ஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் பெல்லாரியில் மாநகராட்சி ஆணையர் ரமேஷை இன்று சித்தராமையா கன்னத்தில் அறைந்ததாக கூறி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சேனல்களில் வெளியாகி பரபரத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் முதல்வர் சித்தராமையா தம்மை அடிக்கவில்லை; அந்த வீடியோ காட்சி, புகைப்படங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என ரமேஷ் விளக்கமும் கொடுத்துள்ளார்.
Comments
English summary
Karnataka CM Siddharamaiah allegedly slapped Bellary corporation commissioner.
Story first published: Saturday, January 16, 2016, 17:08 [IST]