For Daily Alerts
Just In
உடனே 500 நோட்டுக்களை அதிகம் புழக்கத்தில் விடுங்கள்.. ஜேட்லிக்கு சித்தராமையா கடிதம்
பெங்களூர்: ரூபாய் விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 100 மற்றும் 2000 நோட்டுகளுக்கு இடையே வேறு ரூபாய் நோட்டுகளே இல்லை என சித்தராமையா தனது கடிதத்தில், சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் 2000 ரூபாய் நாட்டுக்கு பதிலாக முதலில் 500 ரூபாய் நோட்டை வெளியிட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புதிய 500 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இதனிடையே இன்று முதல் வங்கிகளில் ரூ.500 நோட்டுக்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏடிஎம்களில்தான் அவை கிடைத்து வருகின்றன.
Comments
English summary
Karnataka CM writes letter to Arun Jaitley asking him to introduce new series of 500 rupees notes immediately.
Story first published: Tuesday, November 15, 2016, 9:00 [IST]