கர்நாடக தேர்தல்: 2 வருடங்களுக்கு பின் மீண்டும் வருகிறார்.. காங்கிரஸ் பிரச்சார களத்தில் சோனியா காந்தி
கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். 2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. தேசிய தலைவர்கள், கட்சியின் முக்கியமான தலைவர்கள், மாநில முதல்வர்கள் இதனால் கர்நாடகாவில் கூடியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார். 2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் அவர் 2016 ஆகஸ்டில் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாதியில் பிரச்சாரம் செய்யாமல் வெளியேறினார். 71 வயது நிரம்பியுள்ள அவர் அதன்பின் பிரச்சாரம் செய்யவில்லை.
குஜராத் தேர்தல், திரிபுரா தேர்தல், உத்தரகான்ட், மணிப்பூர், மத்திய பிரதேசம், நாகலாந்து, பஞ்சாப், கோவா என எந்த தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்யவே இல்லை. இந்த நிலையில்தான் தற்போது கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் கர்நாடகாவில் பிஜப்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பிஜப்பூர் தொகுதியில் வரும் மே 8ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். மே 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது இந்த பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும். இவரது பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்குர் உடன் இருந்து கவனிப்பார்.