வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தபோது கர்நாடக முதல்வர் செய்த வேலையை பாருங்கள்
Recommended Video

பெங்களூர்: வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பாதித்த பகுதிகளை விட்டு விட்டு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடகாவில், கேரளாவைப் போலவே அதிக மழை, வெள்ள பாதிப்பை சந்தித்தது குடகு மாவட்டம். இந்த மாவட்டத்தில் பெரும் நிலச் சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடகு மாவட்டத்தில் முதல்வர் குமாரசாமி நேற்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

மழை பாதிப்பு
இதேபோல மங்களூர் நகரை உள்ளடக்கிய தென் கனரா மாவட்டத்திலும் மழை வெள்ள பாதிப்புகளை குமாரசாமி பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 2 நாட்களாகவே அவர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

வைரல் வீடியோ
குமாரசாமி ஹெலிகாப்டரில் பயணித்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் கன்னட நாளிதழ் ஒன்றை குமாரசாமி படித்தபடியே பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பார்வையிடவில்லையா
ஹெலிகாப்டரின் ஜன்னல் வழியாக பாதிப்பு பகுதிகளை பார்வையிடாமல், ஹாயாக செய்தித்தாளை குமாரசாமி படித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

பார்த்ததாக விளக்கம்
முதல்வர் தரப்பில் கேட்டபோது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் சென்றடையும்வரை குமாரசாமி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல் ஹெலிகாப்டர் பறந்தபோது, அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் என்று விளக்கமளிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications