இந்த '2' காரணங்களால் உபேர், ஓலா பைக் டாக்சிகளை பறிமுதல் செய்த கர்நாடக அரசு
பெங்களூர்: முறையான அனுமதி இன்றியும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியும் செயல்பட்டதாகக் கூறி உபேர் மற்றும் ஓலா நிறுவன பைக் டாக்சிகளை கர்நாடக அரசு பறிமுதல் செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உபேர் மற்றும் ஓலா ஆகிய கேப் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தன. உபேர் மோட்டோ, ஓலா பைக் ஆகிய பைக் டாக்சி சேவை புதுமையானதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் 5 உபேர் மோட்டோக்கள், 2 ஓலா பைக்குகளை கர்நாடக அரசு கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளது. முறையான அனுமதி இன்றியும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியும் செயல்பட்டதாகக் கூறி அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து கர்நாடக போக்குவரத்து கமிஷனர் ராமேகவுடா கூறுகையில்,
உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை துவக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. இதன் மூலம் அந்நிறுவனங்கள் மோட்டார் வாகன சட்டத்தை மீறியுள்ளன. பைக் டாக்சி சேவையை துவங்க விரும்பும் நிறுவனங்கள் முதலில் சாலை போக்குவரத்து அத்தாரிட்டியிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.
பைக் டாக்சிகளில் மஞ்சள் நிறத்தில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் உபேர், ஓலா பைக் டாக்சிகள் வெள்ளை நிற நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட பைக் டாக்சிகளின் உரிமையாளர்கள் சட்டத்தை மீறியதற்காக அபராதம் தெலுத்த வேண்டும். இதற்கிடையே உபேர் மற்றும் ஓலா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications