விநாயகர் ஊர்வலத்தில் மோதல் தற்செயலாக நடந்தது.. மத கலவரம் இல்லை.. சொல்வது கர்நாடகா உள்துறை அமைச்சர்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்த நிலையில், "நடந்தது மதக்கலவரம் அல்ல. தற்செயலாக நடந்த சம்பவம்." என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் படரிகொபலு என்ற கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று இரவு நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.

நாகமங்களா என்ற பகுதியில் மசூதி அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் சாலையின் இருபுறமும் இருந்த தள்ளுவண்டி கடைகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். ஒரு கும்பல் மண்டியா சர்கிள் பகுதியில் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் சம்பவத்தை அடுத்து நாகமங்களாவில் உடனடியாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.
தொடர்ந்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். , கல்வீச்சு மற்றும் நாச வேலைகளால் 6 கடைகள் தீயில் எரிந்து முழுமையாக நாசமடைந்ததாகவும், 13 கடைகள் சேதமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கலவரம் தொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாண்டியா மாவட்டம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக 52 பேர் கைது செய்யப்பட்டதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, "நாகமங்கலா நகரில் நடந்தது மதக்கலவரம் அல்ல. தற்செயலாக நடந்த சம்பவம். விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது. மோதலின் போது, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி எறிந்து தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜக தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். காவல்துறையிடம் விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். சட்ட ஆலோசனை வழங்கட்டும். காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். தேவைப்பட்டால், சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுவேன்." என்று கூறினார்.
முன்னதாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் "ஆபத்தான அரசியலின்" விளைவுதான் இந்தச் சம்பவம் என்று விமர்சித்த பாஜக, இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியது. பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமியும் மாநில அரசு மீது குற்றம்சாட்டினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications