தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்தால் பல உயிர் பலியாகும்: மத்திய அமைச்சர் சதானந்தகவுடா
மைசூர்: கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பெருகிவிட்ட இந்த நேரத்தில் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது என்பது இயலாத காரியம் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த இரு மாதங்களில் 490 விவசாயிகள் அம்மாநிலத்தில் தற்கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், மழையும் பொய்த்து, அணைக்கட்டுகளில் தண்ணீர் மளமளவென குறைந்துவிட்டது. நீர் மின்சாரத்தையே மொத்த மின்தேவையில் பாதியளவுக்கு நம்பியுள்ளது கர்நாடகா. அணையில் நீர் இல்லாமல் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கடும் மின்வெட்டு அமலாகியுள்ளது.
இந்நிலையில் மைசூரில் பேசிய மத்திய அமைச்சர் சதானந்தகவுடா கூறியதாவது: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் கர்நாடகா உள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் தண்ணீரை திறந்துவிட்டால் விவசாயிகள் தற்கொலை மேலும் அதிகரிக்கும்.
சரியாக சொல்ல வேண்டுமானால், கூடுதல் தண்ணீர் திறப்பது, இங்கு கூடுதல் உயிர்களை (விவசாயிகள்) பலிவாங்கிவிடும். இவ்வாறு தெரிவித்தார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications