கர்நாடகா: சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் காங். ஆட்சி- சிஃபோர் கருத்து கணிப்பு
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு 128 இடங்கள் கிடைக்கும் என்கிறது சிஃபோர் கருத்து கணிப்பு.
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 118 முதல் 128 இடங்கள் வரை பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் என சி ஃபோர் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. சிஃபோர் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்:

- 61 சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 20 முதல் 30-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
- மொத்தம் 6247 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
- காங்கிரஸ் கட்சிக்கு 118 முதல் 128 இடங்கள் வரை கிடைக்கும்.
- பாஜகவுக்கு 63 முதல் 73 இடங்கள் கிடைக்கும்
- மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 29 முதல் 36 இடங்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications