அடடே கர்நாடகா! தமிழ்நாட்டுக்கு 4,500 கன அடிநீர் திறப்பு- மண்டியாவில் இடைவிடாத 41-ம் நாள் போராட்டம்!
மண்டியா: காவிரியின் குறுக்கே கட்டி வைத்துள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4,500 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது. தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீரை கூட திறக்க கூடாது என மண்டியாவில் 41-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டுக்கு பாய்ந்தோடி வரும் காவிரி நதியை கர்நாடகா 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை மூலம் தடுத்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை போராடிப் பெற வேண்டியுள்ளது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்படுகிறது.

காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. ஆனால் இவ்வளவு நேரையும் குடிநீருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்கின்றன கன்னட விவசாய, இனவாத அமைப்புகள். கபினி அணையிலும் நீர்மட்டம் குறையாமல் தொடர்ந்து நீடித்த அளவில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் தொடர் போராட்டங்களால் தற்போது காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 4,500 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டு வருகிறது. கடந்த பல நாட்களாக தமிழ்நாட்டுக்கு மிக மிக சொற்ப நீரை திறந்துவிட்டது கர்நாடகா.
மண்டியாவில் தொடர் போராட்டம்: இதனிடையே தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கவே கூடாது என வலியுறுத்தி கன்னட விவசாயிகள், இனவாத அமைப்புகள் கர்நாடகாவில் 41-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க கூடாது, காவிரி ஒழுங்காற்று குழு- காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றை கலைக்க வேண்டும் என்பது கன்னட விவசாயிகளின் கோரிக்கை. தங்களது கோரிக்கைக்கு ஆதரவாக ஒட்டுமொத்த கன்னடர்களும் போராட வேண்டும் என்றும் மண்டியா விவசாயிகள் அழைப்பு விடுக்கின்றனர்.
மண்டியாவில் பதற்றம்: காவிரி பிரச்சனையில் மண்டியா, பெங்களூர் பந்த் போராட்டங்கள் முழு அளவில் நடத்தப்பட்டன. ஆனால் கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் முழு அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் மண்டியா மாவட்டத்தில் நாள்தோறும் பல்வேறு அமைப்புகளின் பெயரில் கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications