காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடும் நீரை 20,000 கன அடியாக உயர்த்தியது கர்நாடகா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவை 20,000 கன அடியாக உயர்த்தியுள்ளது கர்நாடகா.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 நாட்களில் 13 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆகையால் 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீரை நள்ளிரவு முதல் கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவை 20,000 கன அடியாக கர்நாடகா உயர்த்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 10 நாட்களுக்குள் 13 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications