கசாபை தூக்கிலிட்ட அதே நபர் தான் மேமனையும் தூக்கிலிடுகிறார்
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட்ட நபர் தான் தூக்கிலிட உள்ளார்.
1993ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை நிறுத்த யாகூப் மேமன் எடுத்து வரும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. இதனால் அவரை வரும் 30ம் தேதி நாக்பூர் சிறையில் வைத்து தூக்கிலிட அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.

மேமனை 26/11 தாக்குதல் வழக்கில் கைதான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அஜ்மல் கசாபை தூக்கிலிட்ட நபர் தான் தூக்கிலிட உள்ளார் என்று கூறப்படுகிறது. யாகூப் மேமனை தூக்கிலிடும் தேதியை மகாராஷ்டிரா அரசு முடிவு செய்ததும் கடந்த 15 நாட்களுக்கு முன்பே அவரை தூக்கிலிடும் நபர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாக்பூர் சிறைக்கு டம்மி வரவழைக்கப்பட்டு அந்த நபர் அதை வைத்து மேமனை தூக்கிலிட பயிற்சி பெற்று வருகிறார். அந்த நபரிடம் யாகூப் மேமனின் எடை உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறை அதிகாரிகள் மேமனின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். தூக்கு தேதி நெருங்கும் வேளையில் மேமன் டென்ஷனாக இல்லாமல் அமைதியாக உள்ளாராம். யாருடனும் அவ்வளவாக பேசுவது இல்லையாம். வழக்கறிஞரிடம் கூட பேசாமல் தலையை மட்டும் தான் அசைக்கிறாராம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேமனுக்கு படபடப்பு ஏற்பட்டதால் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில சமயம் அவர் இரவு நேரத்தில் தூங்காமல் உள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications