காஷ்மீரில் தொடர் பதற்றம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு - அமர்நாத் யாத்திரை 3வது நாளாக நிறுத்தம்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூன்றாவது நாளாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தலைவர்களை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் சுட்டுக் கொலை செய்தனர். ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.முழுஅடைப்பின் போது மாநிலத்தில் பல நகரங்களில் பர்கான் வானியின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வன்முறை ஏற்பட்டது.
அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதில் காஷ்மீரில்,பதற்றம் உருவாகி உள்ளது. தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்துக்கு தீ வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். அனந்தநாக் மாவட்டத்தில் பண்டிபோரா, குவாசிகுந்த், லார்னு ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. இந்த வன்முறையில் 23 பேர் பலியாகினர் 96 பாதுகாப்புப்படை வீரர்கள் உட்பட 200 பேர் காயமடைந்தனர்.
அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
3வது நாளாக இன்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தெற்கு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை முதல் மொபைல் போன் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வன்முறையில் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க கடும் கட்டுப்பாடுகள் இன்றும் அமலில் உள்ளன. அரசுப்பேருந்துகள் இயக்கம் முற்றிலும் முடங்கியது.
சில தனியார் பேருந்துகளும் ஆட்டோ ரிக்சாக்களும் சில இடங்களில் செல்வதை காண முடிந்தது. சையது அலி ஷா கிலானி, மிர்வாய் உமர் பரூக், முகம்மது யாசின் மாலிக் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்கள் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்டக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர், ஐ.பி., தலைவர், காஷ்மீர் மாநிலச் செயலாளர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்ரீ நகர் உள்ளிட்ட சில பகுதியில் இன்றும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு அடிவாரத்தில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய முகாம்களில் இருந்து செல்லும் அமர்நாத் புனித யாத்திரையை 3வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உண்ண உணவு, குடிநீர் இன்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், விரைவில் யாத்திரையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications