காஷ்மீரில் 8ஆவது படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது
ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி. இவர் அங்கு உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
போனியார் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் அவரும், அவருடைய உறவினர்கள் 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தப்பட்டனர்.
கடத்தப்பட்ட மாணவியை 4 பேரும் சேர்ந்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இப்பாலியல் குற்றச்சம்பவம் தொடர்பாக போலீசாரால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 3 நாட்களில் நடந்த 3 சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.