காஷ்மீரில் 8ஆவது படிக்கும் சிறுமி பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட மாணவி. இவர் அங்கு உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

போனியார் என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் அவரும், அவருடைய உறவினர்கள் 4 பேரும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட மாணவியை 4 பேரும் சேர்ந்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இப்பாலியல் குற்றச்சம்பவம் தொடர்பாக போலீசாரால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 3 நாட்களில் நடந்த 3 சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+