மோடி கூட்டத்திற்கு வந்துடாதீங்க: அமெரிக்க தூதரகத்திடம் கூறிய பாஜக
மும்பை: இன்று மும்பையில் நடந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று அமெரிக்க தூதரகத்தை பாஜக கேட்டுக் கொண்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மோடிக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மும்பையில் உள்ள 140 வெளிநாட்டு தூதரகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் 10,000 டீ வியாபாரிகளும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் அமெரிக்கா மீது மக்கள் கோபமாக இருப்பதை பாஜக உணர்ந்தது. இதையடுத்து மோடியின் கூட்டத்திற்காக அமெரிக்க தூதரகத்திற்கு விடுத்த அழைப்பை பாஜக வாபஸ் பெற்றது.
மோடி பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முறையாக மும்பையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications