”இந்தியா உண்மையான பாரத ரத்னாவினை இழந்தது” - கெஜ்ரிவால் இரங்கல்!
டெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களின் திடீர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதுகுறித்த அவர், "அப்துல் கலாம் அவர்கள் நம்மிடையே இல்லை என்பது மிகவும் சோகத்திற்குரியது. நாட்டின் உண்மையான பாரத ரத்னாவினை இழந்துள்ளோம்" என்று வருத்தம் மேலிட தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
last time when i saw Kalam sir!
#RIPKalamSir pic.twitter.com/US9O25ztqj
— Javed Khan (@im_javedkhan) July 27, 2015
முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த கல்வியாளருமான அப்துல் கலாம் அவர்கள் இன்று மாரடைப்பால் ஷில்லாங் பெதானி மருத்துவமனையில் காலமானார்.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியா அனுவல்லமை நாடாக குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.