மோடியின் சுதந்திர தின பேச்சு 'படுபோர்'? செங்கோட்டை மைதானத்தில் தூங்கி வழிந்த தலைவர்கள்
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையாற்றிக் கொண்டிருந்தபோது மத்திய அமைச்சர்கள் அருண் ஜேர்லி, மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், நிர்மலா சீத்தாராமன் மற்றும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தூங்கி வழியும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாட்டின் 70-ம் ஆண்டு சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
தூங்கிய மத்திய அமைச்சர்கள்
பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது வரிசையாக மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தூங்கி வழிந்தனர். அருண்ஜேட்லி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
கேஜ்ரிவாலும் தூக்கம்
இவர்களுக்குப் போட்டியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் தூங்கி விழுந்தார். ஆனாலும் ஆங்கில ஊடகங்கள் கேஜ்ரிவால் தூங்கி வழிந்ததையே பிரதான செய்தியாக்கின.
சமூக வலைதளங்களில்..
அத்துடன் கேஜ்ரிவால் தூங்கும் படங்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இதற்குப் போட்டியாக மத்திய அமைச்சர்கள் தூங்கும் படங்களும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
|
போரடிக்கும் பேச்சு
ஆனால் ஆம் ஆத்மி மூத்த தலைவர் அஸ்தோஷ், தூங்கும் அளவுக்கு பிரதமரின் பேச்சு போர் அடித்திருக்கக்கூடும் எனக் கூறியுள்ளார்.