டெல்லியில் மின் கட்டணம் 50% குறைப்பு
டெல்லி: டெல்லியில் 400 யூனிட்டுகள் வரை மின்சாரம் நுகரும் வாடிக்கையாளருக்கு அதற்குரிய கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் 34,64,000 மின் நுகரும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதில் 28 லட்சம் வாடிக்கையாளர்கள் 400 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் நுகர்வோர் ஆவர். அவர்கள் செலுத்தும் மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை மானியமாக வழங்க டெல்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த அறிவிப்பால் டெல்லி அரசுக்குக் கூடுதலாக ரூ. 200 கோடி செலவாகும். இதில் ரூ. 61 கோடி டாடா பவர் நிறுவனத்துக்கும், மீதமுள்ள ரூ. 139 கோடி, பிஎஸ்இஎஸ் யமுனா, ராஜ்தானி ஆகிய இரு நிறுவனங்களும் அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ. 4,000 கோடி நிலுவைத் தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications