மோடி அலையை தூக்கி விழுங்கிய கெஜ்ரிவாலின் ட்விட்டர் பேரலை
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடி வழியிலேயே விளம்பரம் தேடி அவருக்கு ஆப்பு வைத்துள்ளார்.
டெல்லி தேர்தலில் பாஜக தான் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை வீண் போனதுடன் பாஜக படுகேவலமாக தோல்வி அடைந்தது. மோடி ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூகவலைதளங்களில் மக்களுடன் தொடர்பில் இருந்தும் இந்த தோல்வி எப்படி என்று நினைக்கலாம்.
அதற்கு ஒரே பதில் மோடியை விட ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மிகவும் உற்சாகமாக கருத்து தெரிவித்து வருவது தான்.

கெஜ்ரிவால்
நான் தவறு செய்துவிட்டேன் மக்களே, மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். இனியும் பாதியில் ஓடமாட்டேன் என்று கெஜ்ரிவால் ட்விட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். இதை பார்த்தே பலர் உருகிவிட்டனர்.

மக்கள்
கெஜ்ரிவால் ட்வீட்கள் போடுவதில் வல்லவர். அவ்வாறு ட்வீட் போட்டு போட்டே மக்கள் மனதில் தன்னைப் பற்றி இருந்த ஓடுகாலி இமேஜை திறமையாக மாற்றி சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.

10 லட்சம்
கடந்த 1 மாதத்தில் மட்டும் கெஜ்ரிவாலை டேக் செய்து பத்து லட்சம் ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளது என்றால் அவர் ட்விட்டரில் எவ்வளவு பிரபலம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பதில்
ட்விட்டரில் கெஜ்ரிவாலை டேக் செய்து ட்வீட் போட்டு கேள்வி கேட்டால் மனிதர் சளைக்காமல் பதில் அளிப்பார். இந்த குணம் மக்களுக்கு பிடித்துள்ளது.

ஆப்பு
மோடி தான் சமூகவலைதளங்களில் பிரபலம் என்றால் கெஜ்ரிவால் அவரை விட பிரபலமாக உள்ளார். இது அவருக்கு வாக்கு வங்கியாக மாறி வெற்றியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications