கேரளா: மார்க்சிஸ்ட் மாநாட்டைப் புறக்கணித்த அச்சுதானந்தனை சமாதானப்படுத்தினார் பிரகாஷ் காரத்!
ஆலப்புழை: கேரளாவின் ஆலப்புழையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை புறக்கணித்த அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனுடன் கட்சி தேசிய செயலர் பிரகாஷ் காரத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனால் கட்சிப் பதவிகளை அச்சுதானந்தன் ராஜினாமா செய்யமாட்டார் என்று கூறப்படுகிறது.
கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆலப்புழையில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத் தலைமையின் செயல்பாடுகளை விமர்சித்து கட்சியின் மத்தியத் தலைமைக்கு அச்சுதானந்தன் எழுதிய கடிதத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அச்சுதானந்தன் கோஷ்டித் தலைவரைப் போல செயல்படுவதாகவும், அவரது செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக உள்ளதாகவும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த அவர், சனிக்கிழமையன்று மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் 2 பேர் அச்சுதானந்தனை நேரில் சந்தித்து சமரசம் செய்ய முற்சித்தனர். அப்போது, தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என அச்சுதானந்தன் வலியுறுத்தியதாகவும், இதனை கட்சித் தலைமை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாநாட்டை முழுமையாகப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்த அவர் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டார். இதனிடையே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமது ஆதரவாளர்களுடன் அச்சுதானந்தன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் அச்சுதானந்தன் விலகுவார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் பிரகாஷ் காரத், அச்சுதானந்தனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியுள்ளார். அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாகவும் பிரகாஷ் காரத் இந்த உரையாடலின் போது உறுதியளித்திருக்கிறார். இதனால் அச்சுதானந்தன் எந்த ஒரு பதவியையும் ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications