கோழிக்கோடு லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறை!
Recommended Video

கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மக்களவை தொகுதி வேட்பாளர் பிரகாஷ் பாபுவுக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதை சேர்ந்த பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்ல அனுமதிக்கலாம் என்ற ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக பெரும் போராட்டங்களும் நடைபெற்றன. இந்த போராட்டத்தின் போது சபரிமலை கோயிலுக்கு வந்த நடுத்தர வயதுடைய பெண்ணை தாக்கியதாக பாஜக பிரமுகர் பிரகாஷ் பாபு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் கோழிக்கோடு மக்களவை தொகுதி வேட்பாளராக பிரகாஷ் பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவர் மீது சபரிமலை கலவர விவகாரத்தில் மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தாம் எப்படியும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். எனினும் அன்த மனுவை அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் பிரகாஷ் பாபுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பத்தினம்திட்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications