For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் பயங்கர வெடி விபத்து- 12 வயது சிறுமி உட்பட 6 பேர் பலி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் வீடு ஒன்றில் நடந்த வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள பொடிகுன்ட் அருகே ராஜேந்திரா காலனி பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்த அணு மாலிக் என்ற வடநாட்டவர், திருவிழா காலங்களில் வெடிக்கப்படும் வாணவகைகளை தயாரிப்பதற்காக அங்கு அனுமதியின்றி வெடிப் பொருட்களை சேமித்து வந்ததாக தெரிகிறது.

Kerala blast injures six, including teenage girl

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் அந்த வீட்டில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டது. இதில் அந்த வீட்டின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அருகாமையில் உள்ள சில வீடுகளும் அதிர்ச்சியால் குலுங்கின. இந்த சம்பவத்தின்போது பக்கத்து வீட்டில் இருந்த மாலிக், அவரது மனைவி மற்றும் அவர்களின் மகளான ஹிபா உள்ளிட்ட ஆறுபேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

அருகாமையில் உள்ள பத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் பல வாகனங்கள் இந்த விபத்தில் சேதமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த வீட்டில் அனுமதியின்றி வெடிமருந்தை சேமித்து வைத்திருந்த அணு மாலிக் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

English summary
Six people, including a teenage girl, were injured and several houses and vehicles damaged in a blast in a two-storeyed building where a huge cache of explosives was allegedly illegally stored at Kannur district's Podikkund area in poll-bound south Indian state of Kerala late Thursday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X