காலேஜ் கட்டியதுக்கு யார் காசு தருவா?.. சோனியா காந்திக்கு நோட்டீஸ் விட்ட கேரள பில்டர்!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் கட்டப்பட்ட ராஜீவ் காந்தி வளர்ச்சிக் கல்விக் கழகத்தின் கட்டடத்தைக் கட்டியதற்காக காங்கிரஸ் தரப்பிலிருந்து தனக்குரிய கட்டணத்தைத் தராததை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு கேரளாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவனந்தபுரத்தில் நெய்யார் அணை பகுதியில் இந்த கல்வி நிறுவனம். கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இது கட்டப்பட்டது. ரூ. 2.5 கோடியில் இது கட்டப்பட்டது. 2013ம் ஆண்டு இதை சோனியா காந்தி தொடங்கி வைத்தார். காங்கிரஸ் சார்பில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் கட்டுமானப் பணிக்குரிய கட்டணத்தை இன்னும் காங்கிரஸ் கட்சி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கட்டுமான நிறுவனமான ஹெதர் கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனம், சோனியா காந்தி, முன்னாள் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால் இதற்கு காங்கிரஸார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உள்ளூர்ப் பிரச்சினையில் சோனியாவை இழுப்பது கண்டனத்துக்குரியது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூரஜ்வாலா கூறுகையில் இது முற்றிலும் தவறானது. சோனியாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அவர் எந்த வகையிலும் இதில் தொடர்பு கொண்டிருக்கவில்லை.இது அந்த நிறுவனத்தின் என்ஜீனியர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் இடையிலான மோதல். இதில் காங்கிரஸுக்குத் தொடர்பு இல்லை என்றார்.
சோனியா, ரமேஷ் சென்னிதலா தவில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications