கேரள உள்ளாட்சி தேர்தலில் அடி வாங்கிய காங்.: விழித்துக் கொள்வாரா உம்மன் சாண்டி?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது முதல்வர் உம்மன் சாண்டிக்கு பாடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகளின் முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. அடுத்த ஆண்டு கேரள சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் முன்னோட்டமாக காணப்பட்டது.

Kerala civic polls an eye opener for Chandy

இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வி மூலமாவது முதல்வர் உம்மன் சாண்டி விழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

941 கிராமங்கள், 152 பிளாக்குகள் மற்றும் 14 மாவட்ட பஞ்சாயத்து, 86 முனிசிபாலிட்டிகள் மற்றும் ஆறு கார்பரேஷன்களில் உள்ள 21 ஆயிரத்து 871 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் இடதுசாரி கூட்டணி 10 ஆயிரத்து 338 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 8 ஆயிரத்து 846 இடங்களிலும், பாஜக 1,244 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 65 சதவீத இடங்களிலும், அப்போதைய ஆளும் இடதுசாரி அரசு 33 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து சாண்டி விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+