கேரளா: ஆசிரியை குளிப்பதை எட்டிப் பார்த்த எம்.பி.யின் டிரைவர் தலை "கிரிலில்" சிக்கியது!!
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசியல்வாதிகளின் உதவியாளர்கள் 'லீலைகள்' தொடர் கதையாகி வருகிறது. தற்போது கேரளா எம்.பி. ஒருவரின் ஓட்டுநர், ஆசிரியை குளிப்பதை திருட்டுத்தனமாக எட்டிப் பார்த்தபோது அவரது தலை கிரிலில் சிக்கிய நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வர் உம்மன் சாண்டியின் கால் சென்டரில் பணியாற்றிய ஒருவர், பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட புகாரின் பேரில் நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆர்யாதன் முகமதுவின் உதவியாளர், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே பெண் ஒருவரை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்த வரிசையில்தான் வயநாடு காங்கிரஸ் எம்.பி. ஷானவாஸின் ஓட்டுநர் நவ்சாத் சிக்கியுள்ளார். மலப்புரம் மாவட்டம் ஐகரப்படியை சேர்ந்த நவ்சாத், அவரது வீட்டருகே வசித்து வரும் ஆசிரியை குளிக்கும் போது திருட்டுத்தனமாக குளியல் அறையை எட்டிப் பார்த்திருக்கிறார்.
குளியல் அறையின் வெண்டடிலேட்டரின் கிரில் வழியாக தலையை விட்டு ஆசிரியை குளிப்பதை நவ்சத் பார்த்து கொண்டு இருந்தார். ஆசிரியை குளியலையை விட்டு வெளியேறிய பின்னர் கிரிலில் இருந்து தலையை எடுக்க நவ்சாத் முயன்றார்.
ஆனால் கிரிலில் தலை சிக்கிகொண்டது. வேறுவழியே இல்லாத நிலையில் கூச்சல் போட்டு போராடிப் பார்த்திருக்கிறார்.
மிக நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே நவ்சத்தின் அலறல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. பின்னர் குளியல் அறைக்கு சென்று நவ்சாத்தை பெரும் போராட்டத்துக்குப் பின்னர் மீட்டிருக்கின்றனர்.
நவ்சத்தும் தாம் ஆசிரியை குளிப்பதை பார்த்த போது தலை சிக்கியதை ஒப்புக் கொண்டார். அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.