சுப்ரீ்ம கோர்ட் உத்தரவிட்டும் மதுக் கடைகளை மூடாமல் டிமிக்கி கொடுக்கும் கேரளா... குடிமகன்கள் ஹேப்பி
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதை கேரள அரசு இன்னும் செயல்படுத்தாமல் உள்ளதால் குடிமகன்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
திருவனந்தபுரம்: நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரள அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இதனால் மது விற்பனை ஜரூராக நடப்பதால் குடிமகன்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் பார்கள், மதுக்கடைகள் நடத்த கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்த கடைகளை மாற்று இடங்களில் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கேரள அரசு திணறி வருகிறது. இந்நிலையில் எர்ணாவூர் அருகே பரவூர் ரோட்டில் மதுபான கடை இயங்கி வந்தது. இதுவும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மூடப்பட்டது.
ஆனால் இடத்தை மாற்றாமலேயே பாரை திறக்க என்ன வழி என்று அதன் உரிமையாளர் யோசித்த நிலையில், இவரின் பாரின் பின்புறம் ஏராளமான காலி இடங்கள் உள்ளன நினைவுக்கு வந்தது.
பாரின் கேட்டை பின் புறத்திற்கு மாற்றினால் 500 மீட்டர் வருமா என்று பார்த்தார். சரிப்படவில்லை. இருப்பினும் கடையின் பின்புறம் உள்ள ரோட்டில் இருந்து கடைக்கு செல்லும் வழியை 500 மீட்டராக மாற்ற திட்டமிட்டார்.
அதன்படி பாருக்கு நடந்து செல்லும் வழியை தியேட்டர் கவுண்டரில் இருப்பது போல குறுக்கும் நெடுக்குமாக அமைத்தார். இந்த வழியாக மதுக்கடைக்கு சென்றால் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 510 மீட்டர் வருகிறது. இதையடுத்து பாருக்கு அனுமதி கோரி அவர் கலால் துறையில் விண்ணப்பம் செய்துள்ளார். இதனால் குடிமகன்கள் குஷியாக உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications