அட்டப்பாடியிலிலிருந்து தமிழர்களை வெளியேற்றவில்லை: கேளரா அரசு
திருவனந்தபுரம்: அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் அட்டப்பாடியில் மூன்று தலைமுறையாக தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ஆதிவாசிகள் சட்டம் காரணமாக அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற கேரளா அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புகார் எழுந்தது.
தாங்கள் முறையாக வரி செலுத்தி வருவதாகவும், தங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவதாகவும், அரசு ஆவணங்களே செல்லாது என கேரள அதிகாரிகள் கெடுபிடி செய்து வருவதாகவும் அட்டப்பாடியில் வசித்து வரும் தமிழர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில், அட்டப்பாடியில் இருந்து தமிழர்களை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேரள அரசு மறுத்துள்ளது.
அட்டப்பாடியில் உள்ள தமிழர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கேரளா மாநிலத்தின் மன்னார்காடு பகுதி தாசில்தார் அக்சல் விளக்கம் அளித்துள்ளார். கஸ்தூரிரங்கன் அறிக்கையை தவறாகப் புரிந்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications