ஓடும் ரயிலில் தமிழ் திரைப்பட நடிகைக்கு பாலியல் தொல்லை!
Recommended Video

திருவனந்தபுரம்: நடிகை சனுஷா ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சனுஷா. இவர் வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
நடிகை பாலியல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள, மலையாள முன்னணி நடிகர் திலீப் கதாநாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளார்.

ரேணிகுண்டா நடிகை
தமிழில் ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட தமிழ் படங்களில் சனுஷா நடித்துள்ளார். இதன் மூலம் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறியுள்ளார் இவர். இவர் சம்பவத்தன்று, கேரள மாநிலம் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.

சீண்டல்
அப்போது ஓடும் ரயிலில் வைத்து, சனுஷாவை ஒரு இளைஞர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். பக்கத்து பெர்த்தில் படுத்திருந்தவர் அதிகாலை நேரத்தில் சனுஷாவை நெருங்கி தனது கைகளை படரவிட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சனுஷா அவரது கைகளை பிடித்துக் கொண்டு கத்தி கூச்சலிட்டார். மேலும் டிடிஆரிடம் புகார் அளித்தார்.

போலீசார் நடவடிக்கை
இதையடுத்து டிடிஆர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் பாலியியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்த ஆண்டோ போஸ் என்பவர் என்பது தெரியவந்துள்ளது.

அமலாபால் புகார்
ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மற்றொரு நடிகை இதுபோன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications