போர்க்களமான சபரிமலை.. போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சபரிமலை போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை- வீடியோ

    பத்தனம்திட்டா: சபரிமலைக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தக் கூடாது என்று போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக பல்வேறு அமைப்பைச் சேர்ந்த பெண்கள், பக்தர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Kerala Minister warns those who are in protest against women entry in Sabarimala

    இன்று மாலை கோயில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் பெண்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நிலக்கல்லில் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து வருகின்றனர்.

    பக்தர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. இதனால் நிலக்கல்லில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கேரளத்தின் தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அதில் சபரிமலை வரும் பக்தர்களை யாரும் தடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். சபரிமலையின் அமைதியை குலைப்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர் என்றார் அவர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+