முல்லைப் பெரியாறு: புதிய அணை கட்ட அனுமதி கோரி கேரளா கடிதம்! மத்திய அரசுக்கு அனுப்பியது!!
டெல்லி: முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி கேரளா அடாவடித்தனமாக அணை கட்டியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள அரசின் ஆய்வு மற்றும் வடிவமைப்புத்துறையின் தலைமை பொறியாளர் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் தட்பவெப்ப நிலை மாறுதல் அமைச்சகத்தின் செயலாளருக்கு கடந்த 11-ந் தேதி அனுப்பிய கடித விவரம்:

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 120 ஆண்டுகள் ஆகின்றன. 1895-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே கேரள அரசு, தற்போதுள்ள அணைக்கட்டுக்கு 366 மீட்டர் கீழ்ப்பகுதியில் முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு மற்றொரு புதிய அணையை கட்டுவதற்கு திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்துக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது. தமிழக பகுதியை சேர்ந்த விவசாயிகள் இதனை பெரிதும் நம்பியிருக்கின்றனர். எனவே, அணையின் கீழ்படுகையில் வசிக்கும் மக்களின் உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்துக்கு தொடர்ச்சியாக தண்ணீரை வழங்கும் நோக்கிலும் புதிய அணையை கட்டுவதற்கான தேவை ஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வேக்கள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் புதிய அணையின் வடிவமைப்பு மற்றும் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. புதிய அணையை கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்குவது குறித்து மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
தேவையான சுற்றுச்சூழல் ஆய்வு செய்வது குறித்து தகுதியான நிறுவனங்கள் கேரள அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை ஒன்றை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு தேர்ந்தெடுத்துள்ள நிறுவனத்துக்கான திட்டப்பணி நிபந்தனைகள் இத்துடன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டப்பணி நிபந்தனைகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications